வாடகை வீட்டில் விபசாரம்; 2 பேர் கைது


வாடகை வீட்டில் விபசாரம்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 7:26 PM GMT (Updated: 26 Oct 2021 7:26 PM GMT)

வாடகை வீட்டில் விபசாரம் நடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மகிழ்ச்சி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடப்பதாக பெருமாள்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பசுமதி (வயது 65), பெருமாள்புரம் என்.எச். காலனியை சேர்ந்த முருகன் (38) ஆகிய 2 பேரும் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் முருகன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story