குண்டர் சட்டத்தி்ல் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தி்ல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 7:52 PM GMT (Updated: 26 Oct 2021 7:52 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தி்ல் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த சீதாராமன் என்பவரின் மகன் கணேசன் என்ற கட்ட கணேசன் (வயது 31). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இதேபோல் வீரவநல்லூர் அருகே உள்ள கோட்டாரகுறிச்சி பகுதியை சேர்ந்த உச்சிமாகாளி மகன் சங்கர்கணேஷ் (31). இவர் வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கணேசன் மற்றும் சங்கர் கணேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைத்தனர்.

Next Story