போலீஸ் எனக்கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.100 பறித்தவர் கைது


போலீஸ் எனக்கூறி மாற்றுத்திறனாளியிடம்  ரூ.100 பறித்தவர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 9:58 PM GMT (Updated: 26 Oct 2021 9:58 PM GMT)

சேலத்தில் போலீஸ் எனக்கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.100 பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலத்தில் போலீஸ் எனக்கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.100 பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி
சேலம் பட்டைகோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர் 3 சக்கர வாகனத்தில் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஊதுபத்தி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று மதியம் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் மர்ம நபர் ஒருவர் வந்து போலீஸ் எனக்கூறி உள்ளார். பின்னர் அவரிடம் நீங்கள் சாராயம் விற்பதாக புகார் வந்தது. எனவே சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவரது 3 சக்கர வாகனத்தில் சோதனை நடத்தினார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சுரேசிடம் இருந்து ரூ.100-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
கைது
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் 3 சக்கர வாகனத்தில் அவரை துரத்திக்கொண்டு சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது சுரேஷ் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 
அப்போது அவர் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் (36) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story