விஷம் குடித்த பெண் சாவு


விஷம் குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 28 Oct 2021 8:02 PM GMT (Updated: 28 Oct 2021 8:02 PM GMT)

சிவந்திப்பட்டி அருகே விஷம் குடித்த பெண் இறந்தார்.

நெல்லை:
நெல்லையை அடுத்துள்ள சிவந்திப்பட்டி அருகே முத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் காணியாள மாடசாமி மனைவி செல்லம்மாள் (வயது 52). காணியாள மாடசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்லம்மாள் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story