11 பேருக்கு கொரோனா


11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Oct 2021 5:02 PM GMT (Updated: 29 Oct 2021 5:02 PM GMT)

தாராபுரம்,காங்கேயம்,வெள்ளகோவிலில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

தாராபுரம்
தாராபுரம்,காங்கேயம்,வெள்ளகோவிலில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு மருத்துவமனை சுகாதார துறையினரும் வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், நவீன் மற்றும் மருத்துவ குழுவினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் தினசரி 250-பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை செய்யப்பட்டவர்களின் ரத்தம், சளி மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் வந்தன. அதில் நேற்று 4 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களையும் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
காங்கேயம்
காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேற்று வந்த கொரோனா பரிசோதனை முடிவில் காங்கேயம் ஒன்றிய பகுதியை சேர்ந்த ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு 172 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 இதில், சிவநாதபுரம், தீத்தாம்பாளையம், சேரன் நகர், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Next Story