தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 Oct 2021 8:21 PM GMT (Updated: 30 Oct 2021 8:21 PM GMT)

களக்காட்டில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு:
களக்காடு அருகே நெடுவிளை நடு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரவிச்சந்திரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் சம்பவத்தன்று அங்குள்ள வயலுக்கு சென்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story