பிரபல ரவுடி கொலை வழக்கில் திருச்சி சிறையில் உள்ள 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


பிரபல ரவுடி கொலை வழக்கில் திருச்சி சிறையில் உள்ள 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 3 Nov 2021 5:22 PM GMT (Updated: 3 Nov 2021 5:22 PM GMT)

பிரபல ரவுடி கொலை வழக்கில் திருச்சி சிறையில் உள்ள 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

லாலாபேட்டை, 
பிரபல ரவுடி கொலை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). பிரபல ரவுடியான இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது விவசாய தோட்டத்தில் மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 
இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
இந்தநிலையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ராஜா, குமுளி ராஜ்குமார், நந்தகுமார், சுரேஷ் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், திருச்சி சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story