தாமிரபரணி குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தாமிரபரணி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

விருதுநகரில் தாமிரபரணி குடிநீர் நிறுத்தப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் நகராட்சிக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கி வரும் இடங்களில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக மின் மோட்டார் இயக்கம் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள நிலையில் விருதுநகர் ஆனைக்குட்டம் மூலம் மட்டுமே நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் குடி நீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா கமால் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story