கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தகராறு; 2 பேர் மீது வழக்கு


கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தகராறு; 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Nov 2021 9:15 PM GMT (Updated: 21 Nov 2021 9:15 PM GMT)

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள அலகரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 50). இவர் நேற்று மணமேடு பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, அந்த வழியாக வந்த மணமேடு கிராமத்தை சேர்ந்த ரவி(55) என்பவரிடம், தான் கடனாக கொடுத்த ரூ4 ஆயிரத்தை வடிவேல் திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் குச்சியாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் ரவியின் ஸ்கூட்டரை வடிவேல் அடித்து உடைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக இருவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடிவேல் மற்றும் ரவி இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வடிவேல் மற்றும் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story