மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2021 8:09 PM GMT (Updated: 22 Nov 2021 8:09 PM GMT)

கடையநல்லூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.

கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சுந்தர் (வயது 30). இவர் கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் ஸ்டீல் பீரோ செய்யும் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் அங்கு சென்றனர். சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தருக்கு மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

Next Story