சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார வழிபாடு


சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார வழிபாடு
x
தினத்தந்தி 22 Nov 2021 9:10 PM GMT (Updated: 22 Nov 2021 9:10 PM GMT)

சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவில், காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு பல்வேறு திரவியங்களை கொண்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சுவாமி, அம்பாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பக்தர்கள் பல்வேறு பதிகங்கள் பாடினர். சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கோவில்களில் கொரோனா வழிகாட்டுதல்களின்படி கலந்து கொண்டு வழிபட்டனர்.

Next Story