மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 22 Nov 2021 9:16 PM GMT (Updated: 22 Nov 2021 9:16 PM GMT)

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 47). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள வயலில் களை எடுத்துக்கொண்டிருந்தார். அதே வயலில் தனியாக அவரது மனைவி ஸ்ரீமதி மற்றும் மற்றொரு பெண் களை எடுத்தனர். அப்போது இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது.
இந்நிலையில் சாமிநாதன் வேலை செய்த பகுதியில் மின்னல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், சாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story