முதியவர் சாவு


முதியவர் சாவு
x
தினத்தந்தி 24 Nov 2021 3:58 PM GMT (Updated: 24 Nov 2021 3:58 PM GMT)

திண்டுக்கல் உழவர்சந்தை அருகே மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் உழவர்சந்தை முனியப்பன் கோவில் அருகே கடந்த 22-ந் தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story