கறம்பக்குடி அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை
கறம்பக்குடி அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி:
தற்கொலை
கறம்பக்குடி அருகே உள்ள அம்மானிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வள்ளியம்மை (வயது 55). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story