மது விற்ற 43 பேர் கைது


மது விற்ற 43 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 7:42 PM GMT (Updated: 24 Nov 2021 7:42 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மது விற்றதாக 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 43 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 264 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story