விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலி


விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2021 8:11 PM GMT (Updated: 24 Nov 2021 8:11 PM GMT)

சாத்தூர் அருகே விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலியானார்.

சாத்தூர்,
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 58). இவர் அப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாத்தூர் நான்கு வழிச்சாலை வைப்பாறு பாலம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதில் இவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story