நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 53,264 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 53,264 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 4:41 PM GMT (Updated: 25 Nov 2021 4:41 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்:
48 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,216 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 264 ஆக அதிகரித்து உள்ளது.
413 பேருக்கு சிகிச்சை
இந்தநிலையில் நேற்று 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 346 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 505 பேர் இறந்து விட்ட நிலையில், 413 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் 47 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Next Story