அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி


அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 25 Nov 2021 5:52 PM GMT (Updated: 25 Nov 2021 5:52 PM GMT)

அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.

இளையான்குடி, 
சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (வயது30). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பணிமுடிந்து திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இளையான்குடி போலீசார், அவரது உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து பற்றி இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story