2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு


2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 25 Nov 2021 8:45 PM GMT (Updated: 25 Nov 2021 8:45 PM GMT)

2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது

கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி ெநம்பர் 1 டோல்கேட் அருகே லால்குடி செல்லும் சாலையில் தாளக்குடி கிராம கோவிலான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்று இரவு பூசாரி, கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது கண்டு திடுக்கிட்டார். இதேபோல, அருகிலிருந்த மற்றொரு கோவிலான அடைக்கலம் காத்த அம்மன் கோவிலின் கதவும் உடைக்கப்பட்டு சாமி சிலையில் அணிவிக்கப் பட்டிருந்த ½ பவுன் தாலி திருடப்பட்டிருந்தது.
  இதுகுறித்த தகவலின்பேரில், கொள்ளிடம் ெநம்பர் 1 டோல்கேட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நோய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story