பொதுமக்கள் திடீர் போராட்டம்


பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2021 7:59 PM GMT (Updated: 27 Nov 2021 7:59 PM GMT)

பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
தொடர் மழையால் பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள 8-வது தெருவில் தண்ணீர் வடியாமல் தேங்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வராதவாறு, சாலையில் கான்கிரீட்டால் சிறிது உயரத்துக்கு தடுப்பு அமைத்தனர்.
இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அந்த தடுப்பை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
உடனே போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கு மழைநீரை வடிய வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அமைத்த கான்கிரீட் தடுப்பு அகற்றப்பட்டது. அங்கு மழைநீைர வடிய வைக்கும் பணி நடைபெற்றது.

Next Story