தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2021 12:15 PM GMT (Updated: 28 Nov 2021 12:15 PM GMT)

திருமணம் ஆகாத ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

திருமணம் ஆகாத ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஆரணி சைதாப்பேட்டை நாடகசாலை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன். 

இவரின் மகன் மதன்ராஜ் (வயது 34). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ேவலை பார்த்து வந்தார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

 ஆனால் அவருக்கு பிடித்தமான பெண் கிடைக்கவில்லை, எனத் தெரிகிறது.
திருமண ஏக்கத்திலும், அதிக வேலை பளுவாலும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று காலை வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு சுயநினைவின்றி கிடந்தார். 

அவரை, பெற்றோரும் அப்பகுதியினரும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் தந்தை காத்தவராயன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story