பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது


பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 8:09 PM GMT (Updated: 28 Nov 2021 8:09 PM GMT)

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் பில்லர் என்ற பிரசாத்(வயது 29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம், ஆயுதங்களுடன் தாக்க வந்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரசாத்தை செந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story