அரியலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா


அரியலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Nov 2021 8:09 PM GMT (Updated: 28 Nov 2021 8:09 PM GMT)

அரியலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 21 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story