நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 30 Nov 2021 3:40 PM GMT (Updated: 30 Nov 2021 3:40 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 119 பேர் குணமடைந்து விட்டனர். தற்போது 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 433 பேர் பலியாகி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 493 ஆக உள்ளது. நேற்று 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவில் இருந்து 56 ஆயிரத்து 47 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 410 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story