சேலம் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு பாதிப்பு கொரோனாவுக்கு 2 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு பாதிப்பு கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Nov 2021 8:31 PM GMT (Updated: 30 Nov 2021 8:31 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 49 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 பேர், சேலம் ஒன்றியத்தில் 18 பேர், ஆத்தூர் பகுதியில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு தர்மபுரியில் இருந்து வந்த 4 பேர், நாமக்கல்லில் இருந்த வந்த 3 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலத்தை சேர்ந்த 76 வயதுடைய முதியவரும், 46 வயதுடைய பெண்ணும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story