921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 Dec 2021 4:55 PM GMT (Updated: 3 Dec 2021 4:55 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 17¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக 12 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்மூலம் 14½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 921 இடங்களில் முகாம் அமைத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உரிய காலம் முடிந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Next Story