ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது


ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 9:14 PM GMT (Updated: 4 Dec 2021 9:14 PM GMT)

ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் போத்திராஜ் (வயது 42). இவர் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள், போத்திராஜிடம் சிகரெட் மற்றும் பணம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டார். மேலும் அவர்கள் போத்திராஜை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் மேலமாசி வீதியை சேர்ந்த ஆதித்தன் (23), செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த வெங்கட்பிரபு (21) என்பதும், ரவுடிகளான இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், கடந்த 30-ந் தேதி தான் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story