மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
x
தினத்தந்தி 6 Dec 2021 7:25 PM GMT (Updated: 6 Dec 2021 7:25 PM GMT)

மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியானார்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே கங்கணான்குளம் கரிசல் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரி (வயது 37). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு கங்கணான்குளத்தில் இருந்து சேரன்மாதேவிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சேரன்மாதேவி ரவுண்டானா அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு பாய்ந்தது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற மினி லாரியானது மாரி மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவர் கன்னியாகுமரியை சேர்ந்த முருகன் (42) என்பவரை கைது செய்தார்.

Next Story