வடமாநில தொழிலாளி திடீர் சாவு


வடமாநில தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 7 Dec 2021 6:54 PM GMT (Updated: 7 Dec 2021 6:54 PM GMT)

வடமாநில தொழிலாளி திடீரென்று இறந்தார்.

பணகுடி:

பணகுடியில் உள்ள ஒரு ஓடு தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 40 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்த பின்னர் அங்கு வேலை பார்த்த பதான் சுரேன் (வயது 45) என்பவர் தொண்டை வலியால் அவதிப்பட்டு கூச்சல் போட்டுள்ளார். உடனே ஓடு தொழிற்சாலை மேற்பார்வையாளர் முருகன் அவரை பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். 

தகவல் அறிந்த பணகுடி போலீசார் பதான் சுரேன் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story