வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Dec 2021 7:17 PM GMT (Updated: 9 Dec 2021 7:17 PM GMT)

நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

நெல்லை பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியைச் சேர்ந்தவர் சுடலை. இவருடைய மகன் துர்க்கை முத்து (வயது 19). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி கோழிப்பண்ணை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக துர்க்கை முத்துவின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் துர்க்கை முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நெல்லை அருகே பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் ராஜா (44). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராஜா நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story