திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Dec 2021 3:36 PM GMT (Updated: 13 Dec 2021 3:36 PM GMT)

திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி அடுத்த சத்யசாய் நகர் பகுதியில் வசிப்பவர் ஹரிபாபு (வயது 35). இவர் தனியார் இணையதள இணைப்பு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் வீட்டில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 3 மோதிரம், 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து திருத்தணி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஹரிபாபு புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story