மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 18 Dec 2021 2:12 PM GMT (Updated: 18 Dec 2021 2:12 PM GMT)

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர் ஞானம் மகன் பிரைட்சன் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். பிரைட்சன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவருடன் அவரது நண்பரான பெரியகடை தெருவை சேர்ந்த ஸ்வீஸ்டன் மகன் செர்லின் என்ற ஷெல்டன் (24) என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தூத்துக்குடி பழைய மாநராட்சி அலுவலகம் பகுதியில் வந்தபோது, பிரைட்சன் மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சராகி ஷெல்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரைட்சன் உயிர் இழந்தார். ஷெல்டன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story