திருத்தணி அருகே எரிந்த நிலையில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
திருத்தணி அருகே எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தாடூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரோஸி நாயுடு என்பவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிர் செய்து இருக்கும் இடத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story