வீட்டில் பதுக்கிய 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 24 Dec 2021 7:43 PM GMT (Updated: 24 Dec 2021 7:43 PM GMT)

நெல்லை அருகே வீட்டில் பதுக்கிய 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 25 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story