உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2021 8:00 PM GMT (Updated: 24 Dec 2021 8:00 PM GMT)

உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

திருச்சி, டிச.25-
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண் பாபு (வயது 36). இவர் திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரே அருண்பாபு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அருண் பாபுவை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அருண்பாபுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த பார்த்திபன் (25), திருச்சி உறையூரை சேர்ந்த முகமது சைப் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Next Story