2,252 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது


2,252 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 26 Dec 2021 6:41 PM GMT (Updated: 26 Dec 2021 6:41 PM GMT)

2,252 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.  இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் துணையோடு 1,884 நபர்களுக்கும், நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 167 நபர்களுக்கும், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் 201 நபர்களுக்கும் என மொத்தம் 2,252 நபர்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story