நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 26 Dec 2021 7:38 PM GMT (Updated: 26 Dec 2021 7:38 PM GMT)

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் உள்அரங்கு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி தெரு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, ஐ.சி.ஏ. காலனி, பேராசிரியர் காலனி, எல்.பி.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். அதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்குண்டு,, அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, வழுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story