திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2021 5:28 PM GMT (Updated: 27 Dec 2021 5:28 PM GMT)

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்க உள்ளது. எனவே நேரடி நெல்கொள்முதல் நிலையம் தொடங்கக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  முகமூடி அணிந்து சிலர் வந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். கால்நடை கொட்டகை அமைக்கக்கோரி பதிவு செய்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். நிவாரணம் கேட்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்களை நிராகரிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள், மனு அளிக்க வரும் விவசாயிகளை வேளாண்மை துறை அதிகாரிகள் புறக்கணிப்பது போன்று அவர்கள் நடித்துக்காட்டியது அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story