நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 27 Dec 2021 7:31 PM GMT (Updated: 27 Dec 2021 7:31 PM GMT)

பராமரிப்பு பணிகளுக்காக ராஜபாளையம், சூலக்கரை பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் மற்றும் ஆலங்குளம் உபமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் சேத்தூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோழைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் மற்றும் ஆலங்குளம் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமி புரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர் பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன் பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்கலம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 
அதேபோல விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின் நிலையத்தில் கூடுதல் ஆற்றல் மின் மாற்றி அமைக்கப்பட்ட உள்ளதால் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை வ.உ. சி. நகர், தொழிற்பேட்டை, ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, மீசலூர், தாதம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 


Next Story