பெரம்பலூர் வேளாண்மை அதிகாரி பணியிடை நீக்கம்


பெரம்பலூர் வேளாண்மை அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 28 Dec 2021 8:11 PM GMT (Updated: 28 Dec 2021 8:11 PM GMT)

பெரம்பலூர் வேளாண்மை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:

போக்சோவில் வழக்கு
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, பெரம்பலூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக் குழு செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார்(வயது 46) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு அந்த மாணவியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் 2 பேர் மீதும் சேலம் மாவட்டம் சூரமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து தலைமறைவான வேளாண்மை அதிகாரியான ஜெயக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமாரை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக்குழு இயக்குனர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story