தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
x

பெற்ற மகளை பலாத்காரம் செய்து தாயாக்கிய தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கடலூர், 

பண்ருட்டி பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலாளிக்கு மனைவி, 18 வயது பூர்த்தியாகாத ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த 18 வயது பூர்த்தியாகாத மகளை. பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த தொழிலாளி கடந்த 9.7.2019 முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவரது மகள் 7 மாத கர்ப்பிணியானார்.
இதற்கிடையில் அவரது மகள் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, அங்கேயே அவருக்கு வளர்ச்சி அடையாத குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதை அறிந்த தொழிலாளி, இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாக, அவரது மகள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது பற்றி அவரது தாய் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

சாகும் வரை தண்டனை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 50 வயது தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி பரபரப்பு தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் தொழிலாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுமிக்கு மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.6 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story