ரேஷன் கடையில் தீ விபத்து


ரேஷன் கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 4 Jan 2022 6:18 PM GMT (Updated: 4 Jan 2022 6:18 PM GMT)

பூதப்பாண்டி அருகே ரேஷன் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் வைத்திருந்த பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் எரிந்து நாசமானது.

அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே ரேஷன் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் வைத்திருந்த பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் எரிந்து நாசமானது. 
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ரேஷன் கடை
பூதப்பாண்டி அருகே ஞாலத்தில், சிறமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் பகவதி அம்மாள் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். 
இங்கு ரேஷன்கார்டு தாரர்களுக்கு வழங்குவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. பொருட்களை பைகளில் அடைத்த பின்னர் இரவு 10 மணிக்கு மேல் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
தீ விபத்து
இரவு 11 மணியளவில் கடையின் உள்ளே இருந்து புகை வருவதை அந்த பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து உடனே, கடை விற்பனையாளருக்கு தகவல் தெரிவித்தனர். விற்பனையாளர் பகவதி அம்மாள் உடனே கடைக்கு விரைந்து வந்தார். அவர் கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பொங்கல் பரிசு தொகுப்புக்காக வைத்திருந்த பாமாயில், தேயிலை பாக்கெட்டுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே கடை விற்பனையாளரும், பொதுமக்களும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பரிசு தொகுப்பு பொருட்களில் சில பாக்கெட்டுகள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து நடந்த ரேஷன் கடையில் ேநற்று பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story