பொம்மிடி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பொம்மிடி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2022 4:38 PM GMT (Updated: 5 Jan 2022 4:38 PM GMT)

பொம்மிடி அருகேபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள விடிவெள்ளி நகரை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி நவினா. இவர்கள் திருப்பூரில் தங்கி அங்குள்ள மில்லில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகன் லோகேஷ் (வயது 14). இவன் கதிரிபுரத்தில் உள்ள அத்தை வீட்டில் தங்கி வாசிகவுண்டனூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறைக்காக திருப்பூரில் உள்ள பெற்றோரிடம் சென்று இருந்த மாணவனை பள்ளி செல்வதற்காக ரெயில் மூலம் பொம்மிடிக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர். மாணவன் தனது அத்தை வீட்டுக்கு சென்றான். பின்னர் சிறிது நேரத்தில் மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story