நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 8:26 PM GMT (Updated: 5 Jan 2022 8:26 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
அறுவடை பணி 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
அரசு கொள்முதல் நிலையம் காலதாமதமின்றி உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாலுகா பகுதியில் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறந்துள்ளது. இங்கு அறுவடை செய்த நெல்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 
கொள்முதல் நிலையம் திறப்பு 
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பயன் பெற்று வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக நல்ல மகசூல் கிடைத்துள்ளது. நாங்கள் தற்போது நெல் அறுவடை செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பது வழக்கம். 
இந்தநிலையில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்ைல குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தோம். எனவே கொள்முதல் நிலையம் வத்திராயிருப்பு பகுதியில் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
விவசாயிகள் மகிழ்ச்சி 
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் தாலுகா பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளோம். 
இதில் நாங்கள் நெல்லை விற்க தொடங்கி விட்டோம். வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் நெல் கொள்முதல் தொடங்கியதற்கு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story