ஆட்டோ குறுக்கே வந்ததால் பஸ்- லாரி மோதல்; 22 பேர் படுகாயம்


ஆட்டோ குறுக்கே வந்ததால் பஸ்- லாரி மோதல்; 22 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Jan 2022 8:58 PM GMT (Updated: 6 Jan 2022 8:58 PM GMT)

ஆட்டோ குறுக்கே வந்ததால் பஸ்-லாரி மோதிக்கொண்டதில் 22 பேர் படுகாயமடைந்தனர்.

உடையார்பாளையம்:
பெரம்பலூரில் இருந்து அரியலூர் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் வந்தது. உடையார்பாளையத்தை அடுத்த கச்சிப்பெருமாள் கிராமம் அருகே வந்தபோது குறுக்கே ஆட்டோ வந்ததால் அரசு பஸ்சும் எதிரே நெய்வேலியில் இருந்து சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரியும் நேருக்கு நேரும் மோதிக்கொண்டன. அப்போது இடையில் ஆட்டோவும் சிக்கியது. இதில் ஆட்டோ டிரைவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்(வயது 36), அரசு பஸ் டிரைவர் ராயர்(42) மற்றும் பயணிகள் 20 பேரும் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story