கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2022 4:56 PM GMT (Updated: 8 Jan 2022 4:56 PM GMT)

கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நாளை(திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெறும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக நேரடியாக  கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தங்கள் அத்தியாவசிய கோரிக்கைகளை மனுக்களாக தயார் செய்து கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடலாம். பின்னர் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

Next Story