நகை, பணத்துடன் பள்ளி மாணவி மாயம்


நகை, பணத்துடன் பள்ளி மாணவி மாயம்
x
தினத்தந்தி 10 Jan 2022 7:33 PM GMT (Updated: 10 Jan 2022 7:33 PM GMT)

நகை, பணத்துடன் பள்ளி மாணவி மாயம்

குடியாத்தம்

குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் வயது 16 மாணவி. குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் இல்லை. அப்போது வீட்டில் பார்த்த போது வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகையை அந்த மாணவி எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் தனது மகளை பணம் மற்றும் நகையுடன் காணவில்லை என புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Next Story