கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கிய மனைவி


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கிய மனைவி
x
தினத்தந்தி 10 Jan 2022 8:04 PM GMT (Updated: 10 Jan 2022 8:04 PM GMT)

நித்திரவிளை அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு வாவறை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு 37 வயதுடைய மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் எஸ்.டி. மங்காடு பகுதியில் ஒரு வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். 
கணவர் ராஜ்குமார் வேலைக்கு செல்லும் நேரங்களில் மனைவிக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 
இந்தநிலையில், சம்பவத்தன்று மதியம் ராஜ்குமார் மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் ஒரு அறையில் மனைவியும், கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. 
சரமாரியாக தாக்குதல்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் சத்தம் போட்டார். உடனே மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து வெட்டுக்கத்தி மற்றும் இரும்பு கம்பியால் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
இதற்கிடையே கள்ளக்காதலர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இது சம்பந்தமாக ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கள்ளகாதல் ஜோடியை தேடி வருகிறார்கள். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story