சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 5:19 PM GMT (Updated: 11 Jan 2022 5:19 PM GMT)

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

 சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு 14 வயதான சிறுமி வீட்டில் இருந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கணபதி (வயது 28), பிரபு (35) ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

குண்டர் சட்டத்தில் கைது
இதன் அடிப்படையில் அந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்பவர்கள் கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். மேலும் இதுபோன்ற புகார்களை தெரிவிப்பவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு செல்லாமலேயே 1098 மற்றும் 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் ரகசியமாக வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story