காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2022 7:11 PM GMT (Updated: 11 Jan 2022 7:11 PM GMT)

மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கிருஷ்ணராயபுரம், 
கல்லூரி மாணவர்
கரூர் அருகே பஞ்சமாதேவி அரசு காலனியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் பிரபு (வயது 20). இவர் கரூரில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சூர்யா, சுதாகர் ஆகியோருடன் மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் குளித்துள்ளார். 
அப்போது பிரபு ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பிரபுவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உடல் மீட்பு
இதுகுறித்து அவரது நண்பர்கள் பிரபுவின் குடும்பத்தினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடியும் பிரபு கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது பிரபு தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி பிரபுவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story